×

மிளகாய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் மிளகாய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளான அம்பிளிக்கை, கேதையுறம்பு, இடையகோட்டை, மற்றும் மலைப்பகுதிகளான பால்கடை, வண்டிப்பாதை, கண்ணணூர் உள்பட பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் மிளகாய் நடவு செய்துள்ளனர்.

கடந்த மாதம் கிலோ ரூ.50க்கு விற்பனையான மிளகாய் தற்போது வரத்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ மிளகாய் ரூ.21க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான டன் அளவில் லாரிகள் மூலம் கேரளா, தமிழ்நாட்டின் திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளுக்கு தினமும் மிளகாய் அனுப்பப்படுகிறது.


Tags : Chili , Fall in chilli prices: Farmers worried
× RELATED காளான் போண்டா